Sunday, July 19, 2015

புனித ரமழானை மறவோமே!



இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!




பொறுமையினை பேண வந்த
   பெருமை கொண்ட ரமழானே!
இறை மறையை அதிகமதிகம்
   ஓத வைத்த ரமழானே!
குறையகற்றி நிறை யோங்க
   காட்டித் தந்த ரமழானே!
இறை வழியில் தர்மங்களை
   வுழங்கச் செய்த ரமழானே!

பிணிகளைத் தீர்க்க வந்த
   பயன் மிகு ரமழானே!
குணத்தினில் இனிமை தனை
   கூட்ட வந்த ரமழானே!
மனதினை மலரென
   மாற்ற வந்த ரமழானே!
மணம் வீசும் வசந்த காலம்
   மாதம் முழுதும் ரமழானே!

-      கலாநெஞ்சன் ஷாஜஹான்


No comments:

Post a Comment