Monday, December 31, 2012

பூத்தது புத்தாண்டுப் பூ



காலச் செடியில்
வருடப் பூவொன்று
உதிர்ந்து விழ
மொட்டு விரித்தது
புதுப் பூ!

பூத்தது புத்தாண்டுப் பூ



Thursday, November 1, 2012

பெண்ணே கேள்! (ஒலி வடிவம்)



லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
1-11--2012 அன்று ஒலிபரப்பான அடியேன் எழுதிய கவிதை

        

Wednesday, October 31, 2012

பெண்ணே கேள்!



பெண்ணே!
உன் பெருமை
உனக்குத் தெரியுமா?
·          
நீ சிரிக்கும் போது
பூமி சிரிக்கிறது.

Friday, September 7, 2012

"இலங்கை எங்கள் நாடடா! இன்பம் பொங்கும் வீடடா”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா! இன்பம் பொங்கும் வீடடா )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்



·         

Friday, August 17, 2012

சென்று வா இனிய ரமழானே!





புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------  

Thursday, August 16, 2012

ஏன் இந்த மௌனம்?

தேவி!
......
தீக்குள் வைத்த விரலாய்
என் இதயம்
.............!
•            
ஆலையில் அகப்பட்ட
கரும்பாய்
என் நெஞ்சம்
............!
•            
'ஷெல்' பட்டு
சிதறிய தேகமாய்
என் உள்ளம்
.......!
•      

Thursday, August 9, 2012

மீண்டும் ஒரு தாஜ்மஹால் ( வரி வடிவம் , காணொளி வடிவம்)








மும்தாஜ்!
கோடையில்
வசந்தமாய் உதித்தவளே!
இப்போது
நீ இல்லாத
வசந்தம் கூட
எனக்கு கோடைதான் !

Friday, August 3, 2012

கனவுக் கதவுகள்

London Tamil Radio வில் 2-8-2012 அன்று வியாழன் கவிதை நேரம் நிகழச்சியில் ஒலிபரப்பான கனவுக் கதவுகள் என்ற தலைப்பில் ஒலிபரப்பான எனது கவிதை இது




















அவர்களின் கனவுக் கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கின்றன.
ஆனால்
நனவுகள்தான் உள்ளே நுழைவதில்லை!

வறுமையில் வாடும்
ஏழையின் கனவுக் கதவு

Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012


LondonTamil Radio

இலண்டன் தமிழ் வானொலியில் வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்
12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 26-7-2012

LondonTamil Radio

இலண்டன் தமிழ் வானொலியில் வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்
26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்






Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை


இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்

வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


26-7-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில்



Monday, July 16, 2012

நிலவுக்கு வானத்தில் பகையில்லை




நிலவுக்கு வானத்தில் பகையில்லை
கடலுக்கு நதியுடன் பகையில்லை
இரவுக்கு பகலுடன் பகையில்லை
நட்பு மட்டும் நிலைப்பதில்லை சிலர்
நட்பு மட்டும் நிலைப்பதில்லை     

Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி


        
கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     


( தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு வெள்ளவத்தை தமிழ்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

Saturday, March 24, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி


 (சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாருக்கான கவிதாஞ்சலி இது)

      கவியாக்கம் :- சாமஸ்ரீ தேசகீர்;த்தி கலாநெஞ்சன் ஷாஜஹான்



வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து