Tuesday, July 12, 2011

கவிப் பேரரசு வைரமுத்து வாழ்கவே!
(இன்று வைரமுத்துவின் 58 ஆவது பிறந்த தினம்)

தமிழ் உலகின்

கவிப் பேரரசனே!
கவிதைகளுக்குள்ளும்
பாடல் வரிகளுக்குள்ளும்
வைரங்களையும்
முத்துக்களையும்
விதைத்து வைத்திருப்பவனே!
கவிதைகளை பாமரனின்
காலடிகளுக்கு கொண்டு சென்றவனே!

Monday, July 11, 2011

கண்ணீர்



கண்கள்
வெளியேற்றும் கழிவு!
·
பெண்களின்
ஆயுதம்!
·
சிறுவர்களின்
பாதுகாப்புக் கவசம்.
சாதிக்கும் சக்தி!
·
மனச் சுமைகளை
குறைக்கும் மருந்து!
·
இதய வேதனையின்
இரத்தக் கசிவு!
·
போலி மனிதர்கள்
அணியும்
மூக்குக் கண்ணாடி!
·
விழி வானம்
துன்பத்திலும்
ஆனந்தத்திலும்
சிந்தும் மழை!
கவியாக்கம்கலாநெஞ்சன் ஷாஜஹான்