Friday, August 17, 2012

சென்று வா இனிய ரமழானே!





புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------  

Thursday, August 16, 2012

ஏன் இந்த மௌனம்?

தேவி!
......
தீக்குள் வைத்த விரலாய்
என் இதயம்
.............!
•            
ஆலையில் அகப்பட்ட
கரும்பாய்
என் நெஞ்சம்
............!
•            
'ஷெல்' பட்டு
சிதறிய தேகமாய்
என் உள்ளம்
.......!
•      

Thursday, August 9, 2012

மீண்டும் ஒரு தாஜ்மஹால் ( வரி வடிவம் , காணொளி வடிவம்)








மும்தாஜ்!
கோடையில்
வசந்தமாய் உதித்தவளே!
இப்போது
நீ இல்லாத
வசந்தம் கூட
எனக்கு கோடைதான் !

Friday, August 3, 2012

கனவுக் கதவுகள்

London Tamil Radio வில் 2-8-2012 அன்று வியாழன் கவிதை நேரம் நிகழச்சியில் ஒலிபரப்பான கனவுக் கதவுகள் என்ற தலைப்பில் ஒலிபரப்பான எனது கவிதை இது




















அவர்களின் கனவுக் கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கின்றன.
ஆனால்
நனவுகள்தான் உள்ளே நுழைவதில்லை!

வறுமையில் வாடும்
ஏழையின் கனவுக் கதவு