Tuesday, December 1, 2009


மனிதன்


மனிதன்
ஒரு வனம்!
எல்லா மிருகங்களும்
வாழும் கூடு
அவன் மனம்!
குரங்கு போல் தாவும்
அவன் குணம்!
விலங்கு போல்
கூட்டம் கூட்டமாய் பிரியும்
அவன் இனம்!
சிங்கம் போல் வேட்டையாடுவான்
அது பணம்!
ஒரு நாள் இறப்பான்
அப்போது அவன் பிணம்!


அபூர்வம்

குப்பைக்குள்
குண்டு மணி கிடைக்கலாம்!
ஆனால்
குண்டு மணிகளெல்லாம்
குப்பையில் இருப்பதில்லை!

ச(மி)த்ரு

உனக்கு
எதிரிகள் இருக்க வேண்டும்
நீயாக முன்னேற!


புதிர்

இதயம்
ஒரு இருட்டறை!
உள்ளே இருப்பது
உரியவருக்கும்
தெரியாது!


தென்றலும் புயலும்

சந்தோசத் தென்றல்
நெஞ்சைத் தொடும்
சந்தேகப் புயல்
வீசாதவரை!

பூக்கள்

செடியுல் பூப்பது பூ
திரியில் பூப்பது நெருப்பு
முகத்தில் பூப்பது சிரிப்பு
இதயத்தில் பூப்பது அன்பு


பெருமைகள்

பருவத்தில் பெருமை இளமை
அனுபவத்தில் பெருமை முதுமை
கண்ணுக்குப் பெருமை கூர்மை
பெண்ணுக்குப் பெருமை மென்மை
ஆடைக்குப் பெருமை வெண்மை
ஆடவருக்குப் பெருமை ஆண்மை
வெற்றிக்குப் பெருமை திறமை
தோல்விக்குப் பெருமை பொறுமை!