Tuesday, November 10, 2009

மீண்டும் எழுவோம்


மீண்டும் எழுவோம் மானிடரே-எங்கள்
மானுட வலிமை போதும் இங்கே
மீண்டும் தேசத்தை எழுப்பிடுவோம்-இனி
எங்கள் கரங்களை இணைத்திடுவோம்
(மீண்டும்)

புதிதாய் இனிமேல் பிறப்பெடுப்போம்-வரும்
புதிர்களுக்கெல்லாம் விடைக்கொடுப்போம்
சோதனை வந்தால் வேதனைதான்-அதன்
போதனை புரிந்தால் சாதனைதான்
நடந்தவை கடந்தவை மறந்தவையே-இனி
நடப்பவை யாவும் நல்லவையே
இயற்கையில் பாடம் நாம் படித்தோம் -இனி
ஐக்கிய தேசத்தை நாம் படைப்போம்

Saturday, November 7, 2009





சுனாமியும் நாங்களும்


2004 ம் ஆண்டின்
இறுதி மாதத்தின்
இறுதி பூரணைத் தினம் ! ..
( 26 ம் திகதி)

என்றும் போல்
அன்றும்
காலைப் பொழுது
இனிதாய்ப் புலர்ந்தது.

விடுமுறை தினத்தன்று
விடிந்த பொழுது
கொடுமையை கையோடு
கூட்டி வந்தது.

உதயம்
அஸ்த்தமனத்தை
அழைத்துவந்தது !





ஓலிம்பிக் வீராங்கனை சுசந்திகா


சுசந்திகா!
கறுப்புப் புயலே!

சிட்னி ஒலிம்பிக்கில்
வெண்கலத்தை வென்ற
வீரப் பெண்ணே!

நீ கால்களில் அணிந்திருப்பது
பாதணிகளா?
இல்லை! இறக்கைகளா?

அன்று
உன் கிராமத்தின்
தென்னந் தோட்டங்களில்
தென்றலாய் ஓடித்திரிந்தாய்!

இன்று
சிட்னி நகரில்
புயலாக அல்லவா
புதுமை புரிந்தாய்!

Monday, November 2, 2009






வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!


“ஜய சூரியா“ !
வெற்றிச் சூரியனே !
உன் ஒளி
உலகெங்கும் பரவியிருக்கிறது.

நீ
கிரிக்கட் வரலாற்றில்
ஒரு மைல் கல்!

நீ
சாதனைப் புத்தகத்தின்
சரித்திரப் பக்கங்களில்
உனது பெயரை
பல முறை பதிய வைத்தவன் !
புதிய பக்கங்களை
திறந்து வைத்தவன்

ஒரு நாள் போட்டியின்
ஆட்ட வியூகத்தையே
மாற்றிக் காட்டியவன்!
“டெஸ்ட்” போட்டியில்
இணையாட்ட ஓட்டங்களால்
“எவரெஸ்ட்” டையே தொட்டவன்!

உலத பந்து வீச்சாளர்களுக்கு
உன்னைக் கண்டால்
சிம்ம சொப்பனம் தான்.