Wednesday, July 29, 2015
Sunday, July 19, 2015
என் ஆன்மாவின் கவிதை இறைவன்
என் ஆன்மாவில் இருப்பவனே!
ஏக இறைவனே!
நினை நான் எப்படி புகழ்வேன்?
துன்பங்கள்
என்னை தீயாய் பொசுக்கும் போது
மழை நீராய் பொழிந்து
அவற்றை அணைப்பவனே
நான் ஒன்றுமில்லாத வெற்று நிலம் !
நீ தான் வளங்கள் தந்தாய்.
இந்த வெற்று நிலத்தில் இருக்கும்
மரஞ், செடி, கொடிகள்
மலர்கள், கனிகள் எல்லாம்
நீ விதைத்த விதைகள்
நீ பொழிந்த அருள்கள்
நான் எப்போதெல்லாம்
துயரச் சேற்றில் மூழ்குவேனோ
அப்போதெல்லாம் நீ தான்
கைகொடுத்து காப்பாற்றுகிறாய்!
நான் ஒரு தூசு!
காய்ந்த சருகு!
புயலில் அகப்பட்ட காகிதத் துண்டு!
ஆனால்
நான் அவமானப்படும் போதெல்லாம் - நீ
என்னை கௌரவப்படுத்துகிறாய்!
காயப்படும் போதெல்லாம்
சுகப்படுத்துகிறாய்!
புனித ரமழானை மறவோமே!
இறை மறை அருளப் பெற்ற
இனிய நல் ரமழானே!
அருள் மாரி பொழிந்து வந்த
அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
பெற்றுத் தந்த ரமழானே!
இச்சைகளை அடக்கச் செய்த
இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
நலங் கொடுத்த ரமழானே!
Subscribe to:
Posts (Atom)