Sunday, May 24, 2020

கொரோனா எனும் எச்சரிக்கை



சிறு கிருமி தொடுத்திருக்கும் போர் - இன்று
உலகமே நடு நடுங்குது பார்
பலவான் மனிதன் என்று பேர் - இன்று
பலயீன மானதுவே மனிதனது வேர்!

வானில் பறக்கும் பறவைகளைப் பார்
மண்ணில் வாழும் உயிரினங்களைப் பார்
நீரில் வாழும் மீன்களையும் பார்
இவைகள் வாழ்வில் மாற்றமில்லை பார்


ஆயுதங்கள் பல படைத்து
அடுத்தவனைக் கொன்றொழித்த
மனிதன் என்ற கிருமி இன்று
கொரோனாவுக்கு அஞ்சுது பார்!

ஓடி ஓடி உழைத்து வந்தோம் ….
நேரமின்றி வாழ்ந்து வந்தோம் …..
கால நேரம் இன்று உண்டு…
வீட்டுக்குள்ளே முடங்கி நின்றோம் நாம்!

கடற்கரையும் பூங்காவும்
களியாட்ட அரங்குகளும்
போகவில்லை பயந்து நின்றோம்
வீட்டுக்குள்ளே பலசாலி நாம்!

கொரோனா கிருமி அல்ல!
இறைவனது எச்சரிக்கை!
மனிதனே நேர் வழியில் வாழ்!
இல்லையேல் கிருமியாலே வீழ்!

(கவியாக்கம் -  கலாநெஞ்சன் ஷாஜஹான்)




No comments:

Post a Comment