Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா





ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்



இருளை நீக்கி ஒளிதனை வீச
   உத்தமத் தூதர் நபி பிறந்தார்
அருளைப் பொழிந்து உலகம் செழிக்க
   ஏந்தல் எங்கள் நபி பிறந்தார்
ஓற்றுமை ஓங்க வேற்றுமை நீங்க
   இறைவன் தூதர் நபி பிறந்தார்


நன்மையை ஏவி தீமையை விலக்க
   நானிலத்தில் நபி பிறந்தார்
உண்மையை உணர்த்த பொய்மையை ஒளிக்க
   எழுதத் தெரியா(த) நபி பிறந்தார்
பெண்டிர் வாழ்வை கண்ணியமாக்க
   பூமான் எங்கள் நபி பிறந்தார்

சிறுமைகள் ஒழிந்து பெருமைகள் ஒளிர
   சீலர் எங்கள் நபி பிறந்தார்
மறுமையின் நாளை மனிதர்க் குணர்த்த
   மக்க நகரில் நபி பிறந்தார்
பொறுமையின் பெருமையை உலகுக் குணர்த்த
   போதர் எங்கள் நபி பிறந்தார்


கொடுமைகள் தீர மடைமைகள் ஓட
   கோமான் எங்கள் நபி பிறந்தார்
கடைமைகள் ஐந்தும் உடைமைகள் என்றே
   கண்ணிய எங்கள் நபி பிறந்தார்
அடிமை விலங்கை உடைத்திட என்றே
   அண்ணல் எங்கள் நபி பிறந்தார்

             
     - கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment