Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா



(நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)
                    

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!


                   பாசம் கொண்ட ஆசான்கள்
                        போதிக்கும் அணியிலே
                   சேவை செய்து மகிழும்
                        புனித பணியிலே                
                   வளர வேண்டும்! உயர வேண்டும் 
                         பாலர் பள்ளிக் கூடமே
                   வெற்றி நடைப் போட வேண்டும்
                         நாளும் நாளுமே!

\
-    கலாநெஞ்சன் சாஜஹான் 









No comments:

Post a Comment