Sunday, August 4, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு



பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!



மனித இயந்திரத்திற்கு
பன்னிரண்டு மாதங்களில்
ஒரு மாத விடுமுறை!


கண்ணுக்குத் திரை
வாய்க்குப் பூட்டு
செவிக்கு முத்திரை!


மானிட நேயத்தை
மனிதரில் வளர்க்கும்
அற்புதச் சக்தி!
மனிதனை புடம் போடும்
ஏகனின் யுக்தி!


பிணிகளைத் தீர்க்கும்
நோய் நிவாரணி!
நோயிலிருந்து காக்கும்
நோய்த் தடை காரணி!


ஒரு வருட வாழ்க்கைக்கு
ஒரு மாத நெறியூட்டி
ஒருவரது வாழ்க்கைக்கு
எப்போதும் வழிகாட்டி!


நோன்பு !
சுவர்க்கத்தின் திறப்பு விழா
நரகத்தின் மூடு விழா!


உள்ளத்தின் ஸகாத்
அன்பு!
உடலின் சகாத்
நோன்பு!

நோன்பு!
மனிதனுக்கு
இறைவன் வடித்த
இனிய கவிதை!
இறைவனுக்கு
மனிதன் எழுதும்
பதில் கடிதம்!



-      கலாநெஞ்சன் ஷாஜஹான்



No comments:

Post a Comment