நிலவுக்கு வானத்தில் பகையில்லை
கடலுக்கு நதியுடன் பகையில்லை
இரவுக்கு பகலுடன் பகையில்லை
நட்பு மட்டும் நிலைப்பதில்லை – சிலர்
நட்பு மட்டும் நிலைப்பதில்லை
சேர்ந்தே இருப்பார் இன்பத்திலே
செய் நன்றி மறப்பார் துன்பத்திலே
பணத்தை பார்க்கும் உலகத்திலே
குணத்தை பார்த்திட நேரமில்லை
யாரும் இங்கே நிலைப்பதில்லை- இதை
ஏனோ சிலரும் நினைப்பதில்லை
இரவு என்பது விடியும் வரை
உறவு என்பது முடியும் வரை
வேசம் என்பது நடிக்கும் வரை
பாசம் என்பது இறக்கும் வரை
கற்பு என்பது இழக்கும் வரை - சிலர்
நட்பு என்பது இருக்கும் வரை (நிலவுக்கு வானத்தில்)
முகத்தில் புன்னகை பூத்;திருக்கும்
நெஞ்சில் வஞ்சனை சேர்ந்திருக்கும்
தேவை என்றால் நாடிடுவார் - அவர்
காரியமான பின் ஓடிடுவார்
மனிதா இதயத்தை பேணிவிடு
நட்பின் புனிதத்தை காத்துவிடு
(இக்கவிதை 12-7-2012 அன்று லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது)
No comments:
Post a Comment