Friday, December 7, 2012

நாங்கள் யார் தெரியுமா?





நாங்கள் யார் தெரியுமா?

இரவில் மட்டும்
ஒளிரும்
மின் மினிப் பூச்சுக்கள்
அல்ல நாங்கள்!



விளக்கில் விழுந்து
தற்கொலை
செய்து கொள்ளும்
ஈசல்கள் அல்ல
நாங்கள்!



காக்காய்க் கூட்டில்
களவாய் முட்டையிடும்
குயில்களும் அல்ல
நாங்கள்!


தன் இனத்தையே
உண்ணும்
மீன்களும் அல்ல
நாங்கள்!


மலர் விட்டு
மலர் தாவும்
வண்டினம் அல்ல
நாங்கள்!


நிலவை மறைக்கும்
மேகங்களும் அல்ல
நாங்கள்!


தென்றலாய் வந்து
புயலாகவும் வந்து
இருமுகம் காட்டும்
காற்றும் அல்ல
நாங்கள்!


இதயத்தை
இயந்திரமாக்கி
மனிதத்தை மறந்த
மனிதர்களும் அல்ல
நாங்கள்!


மனிதன் மனிதனை
தூற்றுவதும் போற்றுவதும்
எங்கள் பெயர் சொல்லித்தான்1

ஆம்
நன்றிக்கு
இலக்கணம் வகுத்த
நாய்கள்தான்
நாங்கள்!




No comments:

Post a Comment