வாலிபக்
கிழடு
(இக்கவிதை
நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டது. யார் மனதையும் புன்படுத்த அல்ல)
மூன்றடி உயரங்
கொண்ட மானிடன் - தன்
மனதினிலே தனக்(கு) அவர் மன்மதன்
மான் போல் துள்ளி
யோடும் பெண்கள் - நடந்து
முன் போனால் துடிக்குமிவர் கண்கள்
‘தவக்களை” யின்
சாயலிந்த நாயகன் - கிழடு
தெரிந்தாலும் மறைக்கின்ற வாலிபன்
சிவாஜி போல்
நடையென்ற நினைப்பு - கடந்து
செல்கையிலே
எல்லோர்க்கும் சிரிப்பு
தமிழோடு
பேசிடுவார் ஆங்கிலம் - அது
தரணிக்கிவர் தந்த “தமிங்கிலம்”
கமலஹாசன்
தோற்றுவிடும் புன்னகை – நரை
கண்டாலும் காட்டா(து) இவர் சிகை
ஆந்தை போன்று
பிதுங்கி நிற்கும் விழிகள் - தனியே
உளரிடுவார் கோடி காதல் மொழிகள்
விந்தையாக உடுத்திடுவார் ஆடை - இவர்
வந்ததுமே எங்கும் 'கொலோன்' வாடை
எப்போதும்
புகைத்திடுவார் பிரிஸ்டல் - அப்போது
இவர் புரிவார் கோடி “ரஜனி ஸ்டைல்’
“ஹிப்பி” போல்
குளித்திட வெறுப்பு – வயது
அறுபது கடந்தாலும் வாலிபக் குறும்பு
No comments:
Post a Comment