(நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)
வெள்ளி விழாக் காணும்
அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
துள்ளி;த் திரியும் பாலகர்கள்
அறிவைத் தேடும் கூடமே!
வண்ணத்துப் பூச்சிகள்
பறக்கும் சோலையே
சின்னஞ் சிறு சிறுவர்கள்
கல்வி கற்கும் சோலையே!
சீர் கல்வி நற்பண்பு
பாலர் வகுப்பிலே
வேர் பதிக்கும் நிச்சயமாய்
‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!