Thursday, August 16, 2012

ஏன் இந்த மௌனம்?

தேவி!
......
தீக்குள் வைத்த விரலாய்
என் இதயம்
.............!
•            
ஆலையில் அகப்பட்ட
கரும்பாய்
என் நெஞ்சம்
............!
•            
'ஷெல்' பட்டு
சிதறிய தேகமாய்
என் உள்ளம்
.......!
•      
     
அடைக்கலம் கிடைக்காத
அகதியாய்
நான்
........!
•            
கற்பனைக் கலைந்த
கவிஞனின் நிலையாய்
என் எண்ணம்
.............!
•            
சுட்டு வீழ்த்தப்பட்ட
யுத்த விமானமாய்
என் காதல்
............!
•            
பிரஜா உரிமை கோரிக்கை
நிராகரிக்கப்பட்ட
புலம்பெயர்ந்தவனாய் நான்
..............!
•            
வாசிக்கப்படாமல்
கிழித்தெறியப்பட்ட புத்தகமாய்
என் இருப்பு
...............!
•            
முகவரி தவறாய்
திரும்பி வந்த
மடலாய்
என் மனசு
.............!
•            
தினம் தினம்
ஏறுகின்ற விலைவாசியாய்
என் ஏக்கம்
.............!
•            
நடுக்கடலில்
கைது செய்யப்பட்ட
அகதிகள் படகில் நான்
............!
•            
காணாமல் போன
இரவுகளில்
என் கனவுகள்
..............!
•            
கற்றுக்கொள்ளாத ....
கற்றுக்கொடுக்காத பாடமாய்
என் அன்பு
...........!
•            
தேவி!
இந்த தேச  மக்களின்
அவலக் குரல் போல்....
இந்த பாவி மனம்
அழுகிறது!
•            
அது உனக்குக் கேட்கிறதா?
சொல்!
இல்லை .....
கேட்டும் கேட்காத மாதிரி...
புரிந்தும் புரியாத மாதிரி...!
•            
தேவி!
ஏன் இந்த மௌனம்?
பேசு!
•            
நாம் பேசித் தீர்வு காண்போம்.
எங்களுக்குள்
தினம் தினம் சாகாமல்!

-     -  - கலாநெஞ்சன் ஷாஜஹான்


 லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்





No comments:

Post a Comment