Monday, July 11, 2011

கண்ணீர்



கண்கள்
வெளியேற்றும் கழிவு!
·
பெண்களின்
ஆயுதம்!
·
சிறுவர்களின்
பாதுகாப்புக் கவசம்.
சாதிக்கும் சக்தி!
·
மனச் சுமைகளை
குறைக்கும் மருந்து!
·
இதய வேதனையின்
இரத்தக் கசிவு!
·
போலி மனிதர்கள்
அணியும்
மூக்குக் கண்ணாடி!
·
விழி வானம்
துன்பத்திலும்
ஆனந்தத்திலும்
சிந்தும் மழை!
கவியாக்கம்கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment