Tuesday, July 12, 2011

கவிப் பேரரசு வைரமுத்து வாழ்கவே!
(இன்று வைரமுத்துவின் 58 ஆவது பிறந்த தினம்)

தமிழ் உலகின்

கவிப் பேரரசனே!
கவிதைகளுக்குள்ளும்
பாடல் வரிகளுக்குள்ளும்
வைரங்களையும்
முத்துக்களையும்
விதைத்து வைத்திருப்பவனே!
கவிதைகளை பாமரனின்
காலடிகளுக்கு கொண்டு சென்றவனே!


உனது
காதல் பாடல்களும்
கவிதை வரிகளும்
காதலர்களின்
தேசிய கீதமாக அல்லவா
ஒலித்துக்கொண்டிருக்கிறது.

உன் கவிதைகளில்

கொஞ்சும் சந்தம்!

நீ!
தமிழ் பேசும் மக்களின் சொந்தம்!
வாழ்க நீடூழி!!!
கவியாக்கம் -கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment