பெண்ணே!
உன் பெருமை
உனக்குத்
தெரியுமா?
·
நீ சிரிக்கும்
போது
பூமி
சிரிக்கிறது.
நீ அழும் போது
அதுவும்
அழுகிறது!
·
புவி சூரியனைச்
சுற்றுகிறதாம்.
அந்த
புவியின் இயக்கமே
நீ தான்!
·
உனக்குள்
கோடி
சக்தியுண்டு.
உன்னை
நீ உணர்ந்தால்
அது
உனக்குப் புரியும்!
·
நீ ஒரு உலகம்!
உன் குழந்தைக்கு
உன் கர்ப்பப்பை
உலகம்!
·
நீ தவறுகளையும்
குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
உன் பிள்ளைக்கு!
·
நீ
உனக்குள் பலதை
சுமக்கும்
சுமைதாங்கி!
·
நீ குடும்ப
விருட்சத்தின்
ஆணிவேர்!
·
நீ அசைந்தாலோ
இல்வாழ்க்கையில் கலகம்!
நீ இசைந்தாலோ
பல்கலைகழகம்!
·
நீ
உன்னையே எரித்து
உலகுக்கு
ஒளி வீசும்
தியாக தீபம்!
·
நீ
அன்பின்
பிறப்பிடம்!
பாசத்தின்
உறைவிடம்!
நீ
பெண்ணாக
இருக்கும் வரை!
No comments:
Post a Comment