Wednesday, October 31, 2012

பெண்ணே கேள்!



பெண்ணே!
உன் பெருமை
உனக்குத் தெரியுமா?
·          
நீ சிரிக்கும் போது
பூமி சிரிக்கிறது.

நீ அழும் போது
அதுவும் அழுகிறது!
·          

புவி சூரியனைச்
சுற்றுகிறதாம்.
அந்த
புவியின் இயக்கமே
நீ தான்!
·          
உனக்குள்
கோடி சக்தியுண்டு.
உன்னை
நீ உணர்ந்தால்
அது
உனக்குப் புரியும்!
·          
நீ ஒரு உலகம்!
உன் குழந்தைக்கு
உன் கர்ப்பப்பை உலகம்!
·          

நீ தவறுகளையும்
குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
உன் பிள்ளைக்கு!
·          

நீ
உனக்குள் பலதை
சுமக்கும் சுமைதாங்கி!
·          
நீ குடும்ப விருட்சத்தின்
ஆணிவேர்!
·          

நீ அசைந்தாலோ
இல்வாழ்க்கையில் கலகம்!
நீ இசைந்தாலோ
பல்கலைகழகம்!
·          

நீ
உன்னையே எரித்து
உலகுக்கு
ஒளி வீசும்
தியாக தீபம்!
·          

நீ
அன்பின் பிறப்பிடம்!
பாசத்தின் உறைவிடம்!
நீ
பெண்ணாக இருக்கும் வரை! 


No comments:

Post a Comment